» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இயற்கை மருத்துவ முறை செயல்விளக்க பயிற்சி

செவ்வாய் 18, ஜூன் 2024 11:15:27 AM (IST)



கோவில்பட்டியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா செயல் விளக்க பயிற்சி நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மாவட்ட மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா துறை, வாழும் கலை அமைப்பு ஆகியவை சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா செயல் விளக்க பயிற்சி நடந்தது.  இதில் இயற்கை மருத்துவ முறையில் கண் மற்றும் நாசி சுத்தப்படுத்துதல் குறித்தும். யோகா மூலம் சூரிய நமஸ்காரம், பிராயாணாமம் செயல் விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டது.  

இந்நிகழ்ச்சிக்கு வாழும் கலை அமைப்பின் நிர்வாகி செந்தில் நாயகம் தலைமை வகித்தார். செந்தூர் பாண்டியன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயற்கை மருத்துவர் திருமுருகன் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயிற்சி அளித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அனைவருக்கும் கண் மற்றும் மூக்கு வழி குடுவைகள் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors






Arputham Hospital



Thoothukudi Business Directory