» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சவுண்ட் சர்வீஸ் குடோனில் தீவிபத்து : ரூ.1கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

செவ்வாய் 18, ஜூன் 2024 7:54:42 AM (IST)



தூத்துக்குடியில் சவுண்ட் சர்வீஸ் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.1கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமாகின. 

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் குரூஸ் மொராயிஸ் மகன் டட்லி (67). இவர் நியூ சோபியா சவுண்ட் என்ற சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி அல்பர்ட் அன்கோ அருகில் உள்ள இவரது குடோனில் நேற்று இரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி நகரம், சிப்காட் பகுதியிலிருந்து வந்த 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும், தீவிபத்தில் சவுண்ட் சர்வீஸ் பொருட்கள், டெக்கரேசன் பொருட்கள் உட்பட சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory