» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சவுண்ட் சர்வீஸ் குடோனில் தீவிபத்து : ரூ.1கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
செவ்வாய் 18, ஜூன் 2024 7:54:42 AM (IST)

தூத்துக்குடியில் சவுண்ட் சர்வீஸ் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.1கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமாகின.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் குரூஸ் மொராயிஸ் மகன் டட்லி (67). இவர் நியூ சோபியா சவுண்ட் என்ற சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி அல்பர்ட் அன்கோ அருகில் உள்ள இவரது குடோனில் நேற்று இரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி நகரம், சிப்காட் பகுதியிலிருந்து வந்த 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும், தீவிபத்தில் சவுண்ட் சர்வீஸ் பொருட்கள், டெக்கரேசன் பொருட்கள் உட்பட சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
சனி 14, ஜூன் 2025 8:18:23 PM (IST)

பிட்னஸ் சேலஞ்ச்: சார்பு ஆய்வாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!
சனி 14, ஜூன் 2025 5:46:52 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் இறந்த வழக்கில் ரூ.1.30கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
சனி 14, ஜூன் 2025 4:31:56 PM (IST)

நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலம்: ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 3:30:30 PM (IST)

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!
சனி 14, ஜூன் 2025 12:03:07 PM (IST)

பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
சனி 14, ஜூன் 2025 11:53:18 AM (IST)
