» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் பைக் திருடிய வாலிபர் கைது!

வெள்ளி 14, ஜூன் 2024 5:49:42 PM (IST)

கோவில்பட்டியில் ரூ.75ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்து வாகனத்தை மீட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் ராஜேந்திரன் (62) என்பவர் நேற்று தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பின்பு சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது அவரது இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது. இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த காந்தாரி மகன் கனகராஜ் (38) என்பவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நீதிவேந்தன் மற்றும் போலீசார் கனகராஜை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ. 75,000 மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors

CSC Computer Education








Thoothukudi Business Directory