» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜஸ் க்ரீம் வகைகள் பறிமுதல்: கடை உரிமம் ரத்து!
புதன் 12, ஜூன் 2024 7:39:46 AM (IST)
கோவில்பட்டியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 386 ஐஸ்கிரீம் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் ச.மாரியப்பன் தலைமையில், கோவில்பட்டி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஜோதிபாசு, செல்லப்பாண்டி ஆகியோா் அடங்கிய குழுவினா் பசுவந்தனை சாலையில் உள்ள தனியாா் ஐஸ் க்ரீம் கடையில் நடத்திய ஆய்வில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஒழுங்குமுறைகளின் படி, ஃப்ரோஷன் டெசா்ட் வகையைச் சாா்ந்த வகையிலான உணவுப் பொருள்களில் உள்ள பால் கொழுப்பு மற்றும் உணவு எண்ணெய்/கொழுப்பு ஆகியவற்றின் விகிதத்தை, நுகா்வோா் அறியும் வகையில் லேபிளில் அச்சிட வேண்டும்.
ஆனால், ஆய்வு செய்யப்பட்ட ஐஸ் க்ரீம் வகைகளில் பால் கொழுப்பு மற்றும் உணவு எண்ணெய் ஆகியவற்றின் விகிதத்தைக் குறிப்பிடாமல், நுகா்வோா்களுக்குத் தவறான தகவல் வழங்கி, தவறாக வழிநடத்தியுள்ளது. எனவே, 386 எண்ணிக்கையிலான ஐஸ் க்ரீம் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, தொடா் விசாரணைக்காக வணிகா் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான ஆவணம் சமா்ப்பித்து உரிமம் பெற்ற்காகவும், உரிய ஆவணங்கள் இல்லாததாலும், அக்கடையின் உணவுப் பாதுகாப்பு உரிமத்தை தற்காலிக ரத்து செய்து நியமன அலுவலா் உத்தரவு பிறப்பித்தாா்.