» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்தியால் தாக்கி கொலை மிரட்டல்: ரவுடி கைது!

செவ்வாய் 11, ஜூன் 2024 4:19:34 PM (IST)

தூத்துக்குடியில் தகராறு செய்து  கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 09.06.2024 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீதாஜீவன் நகரை சேர்ந்த சண்முகவேல் மகன் சிலுவை பிச்சை ராபின் (30) என்பவர் மதுபோதையில் அவரது குடும்பத்தாரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது சிலுவை பிச்சை ராபினின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த மாசாணம் மகன் ஜீவா (37) என்பவர் சிலுவை பிச்சை ராபினை சத்தம் போட்டுள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த சிலுவை பிச்சை ராபின் மேற்படி ஜீவாவிடம் தவறாக பேசி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜீவா நேற்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  ஆர்த்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிலுவை பிச்சை ராபினை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட சிலுவை பிச்சை ராபின் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் கொலை வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory