» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீட் தேர்வால் தூத்துக்குடி மாணவர்கள் கடும் பாதிப்பு : தனி கட் ஆப் வைக்க கோரிக்கை!

திங்கள் 10, ஜூன் 2024 12:40:45 PM (IST)



2024 நீட் தேர்வில் இந்தியா முழுவதும் எளிதான வினாத்தாள் அளிக்கப்பட்டு, தூத்துக்குடியில் மட்டும் கடினமான வினாத்தாள் அளிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ மாணவிகள் முற்றுகையிட்டனர். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் அளித்துள்ள மனுவில், "2024 நீட் தேர்வில் இந்தியா முழுமைக்கும் இதுவரை இல்லாத வகையில் மிக மிக எளிய QRST வரிசை எண் கொண்ட வினாத்தாள் மூலம் நீட் தேர்வு 2024ல் நடந்த நிலையில் எங்களுக்கு மட்டும் மிக மிக கடினமான MNOP வரிசை எண் தெரிய வினாத்தாள் வழங்கப்பட்டது. இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக நாங்கள் முறையிட்டும் இதுவரை தேசிய தேர்வு முகமையால் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தூத்துக்குடி அழகர் பப்ளிக் ஸ்கூல் தேர்வு மையத்தில் நீட் தேர்வை எழுதிய நாங்கள் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாலும், விடையளிக்க அதிக நேரம் செலவானதினாலும் எங்களால் அதிக மதிப்பெண் பெற இயலாமற் போய்விட்டது. எங்களது எதிர்காலமே எங்கள் கண்முன் இருண்டு காணப்படுகிறது. மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எங்களோடு நீட் தேர்ச்சி பெறுவதற்கு பணம் செலவு செய்து முன் முயற்சிகளை எடுத்து உழைத்த எங்களது பெற்றோர்களும் கண்ணீர் வடித்து நிற்கின்றனர். 

எங்களது மருத்துவர் கனவு கனவாகவே போய்விடுமோ? என்ற ஏக்கம் எங்களை வாட்டி வதைக்கிறது. எனவே, QRST மாடல் டைப் வினாத் தாள்களுக்கு தனி கலந்தாய்வு, தனிக் கட்ஆப் மார்க்கும், MNOP மாடல் வினாத்தாள்களுக்கு தனி கலந்தாய்வு தனி கட்ஆப் மார்க் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

ரேகா சிவகுமார்Jun 12, 2024 - 11:10:17 AM | Posted IP 162.1*****

என் மகளும் அழகர் பள்ளியில் தான் நீட் தேர்வு எழுதினார்.வினாத்தாள் மாற்றம் மற்றும் அதற்கான மதிப்பெண் தெரியாமல் மிகுந்த மனவேதனை அடைந்து வருகிறோம்.மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . மாணவர்கள் கல்விக்கு வழிகாட்ட வேண்டும்.

JAIHINDJun 10, 2024 - 04:07:58 PM | Posted IP 162.1*****

பற்றி முழுமையாக அறிந்து கொண்டு கொண்டு, பேசுங்க அரை வேக்காடு மனிதர்களே.....அதைப்பற்றி தெரியாமலே உளர வேண்டியது.....

manithanJun 10, 2024 - 03:06:00 PM | Posted IP 162.1*****

முட்டா சங்கிகள் விளக்கமளிக்கவும்

ஸ்டாலின் தான் வாராரு விடியல் தர போறாருJun 10, 2024 - 02:18:13 PM | Posted IP 162.1*****

அந்த நீட் ரகசியம் உதயநிதி கிட்டே இருக்கு 2029 தேர்தல் வரும்ல அப்போ ஒழித்து விடுவாரு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory