» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பழக்கடையில் திருட்டு: காவல் நிலையத்தில் வியாபாரிகள் புகார்!
திங்கள் 10, ஜூன் 2024 11:10:36 AM (IST)

தூத்துக்குடியில் பழக்கடையை சூறையாடி, பணத்தை திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக சங்கத்தினர் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் கேஎஸ் புரூட்ஸ் & ஜூஸ் பார்க் என்ற பழக்கடை நடத்தி வருகிறார். கடந்த 8ஆம் தேதி பழக்கடையில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் சூறையாடி, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.4ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தின் இணைச்செயலாளர் தெர்மல் சொ.ராஜா சிப்காட் காவல் நிலையத்தில் மனு அளித்தார். இதில் மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் நல சங்க பொது செயலாளர் பா.காளிதுரை, புது பஸ் ஸ்டாண்ட் சங்க செயலாளர் தளபதி செபஸ்தியான், அண்ணா பேருந்து நிலைய சங்க பொருளாளர் விக்னேஷ், சங்க பொருளாளர் ஏனோஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:12:10 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:14:32 AM (IST)
