» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் முன்பு பாய்ந்து நில புரோக்கர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
ஞாயிறு 9, ஜூன் 2024 7:40:39 PM (IST)
தூத்துக்குடியில் ரயில் முன்பு பாய்ந்து நில புரோக்கர் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தைச் சேர்ந்தவர் தங்கப்பழம் மகன் அந்தோணி சதீஷ்குமார் (44). நில புரோக்கர்தொழில் செய்து வந்தார். இவர் தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து கடந்த 3 மாதமாக தூத்துக்குடியில் தனியாக வீடு எடுத்து வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு மீளவிட்டான் ரயில் நிலையம் அருகில் மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:30:25 PM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)

செருப்பு கடையில் திடீர் தீவிபத்து : பல லட்சம் மதிப்புள்ள காலணிகள் எரிந்து சேதம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:20:23 AM (IST)

டிரைவரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:18:21 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயா்வு!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:10:16 AM (IST)
