» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லஞ்சம் வாங்கிய சார் ஆய்வாளர் கையும் களவுமாக கைது : லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி!
புதன் 29, மே 2024 9:58:40 PM (IST)
விளாத்திகுளத்தில் ரூ.3ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவை பிரிவு சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

ஆனால், செல்வ மாடசாமி விண்ணப்பத்தை பரிசீலிக்க ரூ.4 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக சிவலிங்கம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரூ.3 ஆயிரம் தருவதாக தெரிவித்தார். ஆனாலும், லஞ்சம் கொடுக்க விருப்பாத சிவலிங்கம், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரையிடம் புகார் தெரிவித்தார். அவரது அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய பணத்தை போலீசார் சிவலிங்கத்திடம் கொடுத்து அனுப்பினர்.
இன்று மாலை 3 மணி அளவில் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் சூப் கடையில் வைத்து செல்வ மாடசாமியிடம் பணத்தை சிவலிங்கம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுதா தலைமையிலான போலீசார் கையும், களவுமாக செல்வ மாடசாமியை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட செல்வமாடசாமி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். விளாத்திகுளம் அருகே சுப்பிரமணியபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விளாத்திகுளம் அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிலஅளவையர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ரோச் பூங்காவவை செப்பனிட்டு பராமரிக்க வேண்டும் : மேயரிடம் கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:40:35 PM (IST)

டாஸ்மாக் கடையில் மதுபானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் : பாஜக கோரிக்கை
புதன் 19, மார்ச் 2025 3:24:03 PM (IST)

தூத்துக்குடியில் புதிய பூங்கா, விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் : மேயர் தகவல்
புதன் 19, மார்ச் 2025 3:17:23 PM (IST)

பெட்ரோலில் எத்தனால் கூடுதலாக கலப்பதால் வாகனங்கள் பழுது: ஆய்வு நடத்த கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:06:01 PM (IST)

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

போ.முருகேசன்மே 30, 2024 - 07:43:00 AM | Posted IP 162.1*****