» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வல்லநாடு ஊராட்சியில் புதிதாக சாலைகள் அமைக்க கோரிக்கை
புதன் 29, மே 2024 4:59:43 PM (IST)

வல்லநாடு ஊராட்சியில் வெள்ளையத்தேவன் மணி மண்டபம் அமைந்துள்ள தெருவில் புதிதாக சாலைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வல்லநாடு ஊராட்சியில் வெள்ளையத்தேவன் மணி மண்டபம் அமைந்துள்ள தெருவில் உள்ள சாலை மிக சேதமடைந்து கழிவு நீர் தேங்கிய நிலையில் மோசமாக உள்ளது. இந்த தெருவில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் மணி மண்டபம், VTVD உயர்நிலைப் பள்ளி, பெருமாள் கோவில், விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
மேலும் மத்திய அமைச்சர்கள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்ல கூடிய பிரபலமான கோசாலை இந்த தெருவில் அமைந்துள்ளது. இந்த பிரதான தெருவில் அடிக்கடி முக்கியமான பிரமுகர்கள் வந்து செல்வதால் இந்த தெருவில் சேதமடைந்த அனைத்து சாலையையும் சிறப்பான முறையில் புதிதாக சாலை அமைத்து தருமாறு பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிறுவனர் மு.சுகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)

விவசாயி வீட்டில் புகுந்து ஆடு, கோழிகள் திருட்டு : 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:37:38 AM (IST)

கோவிலில் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
செவ்வாய் 25, மார்ச் 2025 8:34:54 AM (IST)

தூத்துக்குடியில் 2½ கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:25:14 AM (IST)

திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் இடமாற்றம் : பக்தர்கள் வரவேற்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 8:18:42 AM (IST)
