» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகளுக்கு காகித மடிப்புகலை பயிற்சி!
ஞாயிறு 26, மே 2024 1:47:52 PM (IST)

கோவில்பட்டியில் கலை இலக்கிய கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியில் காகித மடிப்புகலை பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் நடந்த கலை இலக்கிய கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியில் 6ம் நாள் நிகழ்வாக காகித மடிப்புகலை பயிற்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா தலைமை வகித்தார்.வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள், தொடக்கக் கல்வி உதவித் திட்ட அலுவலர் நாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறார் இலக்கிய அமைப்பின் நிர்வாகி ராஜலட்சுமி நாராயணசாமி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க பயிற்சியாளர் அமல்ராஜ் குழந்தைகளுக்கு காகித மடிப்புகலை குறித்து பயிற்சி அளித்தார். இதில் சிறார் இலக்கிய அமைப்பின் நிர்வாகிகள் மணிமொழிநங்கை, கண்ணகி,முருகேசன் உள்படபலர் கலந்து கொண்டனர்.வட்டார வள மைய மேற்பார்வையாளர் நட்டாத்தி நன்றி கூறினார்.
இதில் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான குழந்தைகள் காகித மடிப்புக் கலை பயிற்சி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் சாமுவேல்,சிறார் இலக்கிய அமைப்பின் செயலர் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

திருச்செந்தூா் தொகுதியில் கனிமொழி எம்.பி., மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:11:22 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:38:35 PM (IST)

தூத்துக்குடி டி மார்ட் வணிக வளாகத்தில் தீ விபத்து!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:23:34 PM (IST)
