» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் கந்தசாமிபுரம் பொது மயானத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம்
ஞாயிறு 26, மே 2024 1:40:22 PM (IST)

நாசரேத் கந்தசாமி புரத்தில் அனைத்து சமுதாய மக்களும் இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய பொது மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு சமீபத்தில் தான் சாலை, தண்ணீர், மின் விளக்கு எரிமேடை, காத்திருப்போர் அறை போன்ற அனைத்து வசதிகளும் அரசு மூலம் செய்து கொடுக்கப்பட்டது.
இங்குள்ள காத்திருப்போர் அறையில் இரவு நேரத்தில் சமூக விரோதிகளும் குற்றப் பின்னணியில் உள்ளவர்களும் மது குடித்து விட்டு இங்கு பதுங்கி இருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இங்குள்ள குடிநீர் குழாயை சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர். சமூக விரோதிகள் இங்கு பதுங்குவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.
வேலைக்கு சென்று இரவு இவ்வழியாக வரும் பெண்களுக்கும் ஆபத்து உள்ளது. ஆகையால் காவல் துறை இரவு நேரங்களில் மேற்படி பொது மயான பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டு பொது சொத்தை சேதப்படுத்திய சமூக விரோதி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்பது ஒரே குரலாக இருக்க வேண்டும்: வைகோ பேச்சு!
சனி 26, ஏப்ரல் 2025 11:55:10 AM (IST)

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் : துரை வைகோ எம்பி பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 26, ஏப்ரல் 2025 10:45:49 AM (IST)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)
