» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீனவருக்கு கத்திக்குத்து : வாலிபர் கைது

ஞாயிறு 26, மே 2024 12:35:50 PM (IST)

தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் தாக்கி பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர. 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் களஞ்சியராஜ் (46). மீனவர் ஆன இவர் தூத்துக்குடி பூபால்ராயபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் இவரிடம் கத்தியக்கட்டி மிரட்டி பணம் கேட்டாராம். ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே அவரை கத்தியால் குத்தினார்.

இதில் அவர் காயம் அடைந்த களஞ்சியராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி கோவில் பிள்ளை விளையைச் சேர்ந்த தாசன் மகன் நிக்சன் (19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory