» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கடற்கரையில் தீக்குளித்த நபர் மருத்துவமனையில் அனுமதி!!

சனி 25, மே 2024 9:56:21 PM (IST)

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடங்கனேரியைச் சோ்ந்த பரமசிவன் மகன் மாதவன் (52). 4 குழந்தைகள் உள்ளனா். இவா், திருச்செந்தூா் கோயில் கடற்கரை அய்யா அவதாரபதி கலையரங்கு அருகே இன்று மாலை மது போதையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டாராம்.

தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தோா் அவசர ஊா்தியில் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவிக்குப் பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்செந்தூர் கடற்கரையில் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory