» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் அருகே பைக் விபத்தில் ஒருவர் பலி

வியாழன் 23, மே 2024 11:17:31 AM (IST)

திருச்செந்தூர் அருகே பைக் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயம் அடைந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் சிவநேசன் (65). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பலவேசமுத்து மகன் சுதர்சன் (48) என்பவருடன் மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். 

பரமன்குறிச்சி திருச்செந்தூர் பிரதான சாலையில் செல்லும்போது திடீரென பைக் நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிவநேசன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory