» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு

வியாழன் 23, மே 2024 11:10:18 AM (IST)

கயத்தாறு அருகே காணாமல் போன முதியவர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர. 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (64). இவர் கடந்த 21ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் இவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அங்குள்ள காட்டுப் பகுதியில் அவர் இறந்து கிடந்தார். 

இது குறித்து அவரது உறவினர் சந்தன பாண்டியன் கயத்தார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இவர் எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory