» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கடலில் மூழ்கி தூத்துக்குடி வாலிபர் பலி
புதன் 22, மே 2024 4:57:08 PM (IST)
திருச்செந்தூர் கோவில் விசாகத்திற்காக சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் தமிழகம் உட்பட பல்வேறு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக் கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரம், வடக்கு தெரு, முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆத்தியப்பன் மகன் செல்வகனி (26) இவர் இன்று காலை நண்பர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கடலில் குளித்த அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார்.
இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)
