» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணை அரிவாளால் வெட்டியர் கைது!

புதன் 22, மே 2024 10:26:34 AM (IST)

செய்துங்கநல்லூரில் கபடி விளைடியாட்டில் ஏற்பட்ட தகராறில், பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், சந்தையடி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ராக்குக்குட்டி (21), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மகேஷ் (31) என்பவருக்கும் கபடி விளையாடும் போது தகராறு ஏற்பட்டது. இதை ராசுகுட்டியின் தாயார் திருவரங்க செல்வி (55) என்பவர் கண்டித்து சண்டையை விலக்கி விட்டுள்ளார்.

அப்போது ஆத்திரம் அடைந்த மகேஷ் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த திருவரங்கச் செல்வி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மகேஷை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory