» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கில் சென்று ஆடு திருடிய 2 பேர் கைது!
புதன் 22, மே 2024 8:49:59 AM (IST)
கயத்தாறு அருகே மோட்டார் பைக்கில் சென்று ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்கு ஆத்திகுளம் மேலத்தெரு விஜயராஜ் மகன் முத்துப்பாண்டி (37). இவர் விவசாயம் மற்றும் ஆடு மேய்த்தல் தொழில் செய்து வருகிறார். இவர், சுமார் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் உள்ள ஆட்டுத்தொழுவத்தில் ஆடுகளை அடைத்து வைப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலையில் ஆடுகளை மேய்த்து வந்த அவர், இரவு 7 மணிக்கு ஆட்டு தொழுவில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் தொழுவில் இருந்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினருடன் அவர் சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் ரூ. 8ஆயிரம் மதிப்புள்ள செம்மறி ஆட்டை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் வழக்கு பதிவு செய்து அந்த 2 வாலிபர்களையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள், வடக்கு இலந்தைகுளம் மாரிமுத்து மகன் மணிகண்டன் (21),அதே ஊரைச் சேர்ந்த பூல்பாண்டி(29) என தெரியவந்தது. தொடர்ந்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் புதிய பூங்கா, விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் : மேயர் தகவல்
புதன் 19, மார்ச் 2025 3:17:23 PM (IST)

பெட்ரோலில் எத்தனால் கூடுதலாக கலப்பதால் வாகனங்கள் பழுது: ஆய்வு நடத்த கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:06:01 PM (IST)

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)
