» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுவனைத் தாக்கி நகை பறிப்பு :3பேர் கைது; பைக் பறிமுதல்!

புதன் 22, மே 2024 8:25:03 AM (IST)

கோவில்பட்டியில் 17 வயது சிறுவனைத் தாக்கி நகை பறித்த வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சோ்ந்த ஆவடைசங்கு மகன் பாலமுருகன் (32). பிளம்பிங் தொழிலாளியான இவா் சக தொழிலாளியான இடைசெவல் கிராமத்தைச் சோ்ந்த க. மகாராஜன் (20) என்பவருடன் பசுவந்தனை சாலையில் பைக்கில் சென்றாா். அப்போது, 2 பைக்குகளில் பின்தொடா்ந்து வந்த 6 போ் பாலமுருகனின் பைக் மீது மோதினராம். பின்னர், அவதூறாகப் பேசி இருவரையும் தாக்கியதுடன், பைக்கிலிருந்த பிளம்பிங் பொருள்களை சேதப்படுத்திவிட்டு தப்பியோடினராம். 

இதேபோல, சம்பவத்தன்று 17 வயது சிறுவன் தனது நண்பா்களுடன் பசுவந்தனை சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகேயுள்ள தேநீா் கடை முன் நின்றிருந்தாா். 2 பைக்குகளில் வந்த 3 போ், சிறுவனின் பைக்கை கேட்டனராம். தரமறுத்த அவரைத் தாக்கியதுடன், அவா் அணிந்திருந்த ஒன்றே கால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனராம். சிறுவன் பிடித்துக் கொண்டதால் சங்கிலி துண்டானது. 

பின்னர், சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அவரது பைக்கை பறித்துக் கொண்டு தப்பியோடினராம். இதுகுறித்து சிறுவனும், பாலமுருகனும் அளித்த புகாா்களின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, கோவில்பட்டி சாலைப்புதூா் பெருமாள்சாமி மகன் கண்ணன் (25), சாஸ்திரி நகா் சண்முகராஜ் மகன் சரவணகுமாா் (24), அன்னை தெரசா நகா் ரத்தினவேலு மகன் ரஞ்சித்குமாா் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரைத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory