» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலயத்தில் அசன பெருவிழா

செவ்வாய் 21, மே 2024 7:57:51 PM (IST)



பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலயத்தில் நடந்த அசன பெருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
 
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலய வளாகத்தில் 121 வது ஆலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. சேகர தலைவர் ஜெபாஸ் ரஞ்சித் தனராஜ் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திரளான பேர்களுக்கு அசன விருந்து வழங்கப்பட்டன. 

ஏற்பாடுகளை சேகர தலைவர் ஜெபாஸ், சபை ஊழியர் கிறிஸ்டோபர், தூய இம்மானுவேல் ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் ஜெபசிங், செயலர் ஜெபசிங் ஞான்ராஜ், துணைச் செயலர் அ௫ள்ராஜ் , பொ௫ளாளர் சாலமோன், தி௫மண்டல பெருமன்ற உறுப்பினர் அன்புதுரை மற்றும் உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory