» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜூன் 30ல் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம்

புதன் 15, மே 2024 11:09:25 AM (IST)

நாகர்கோவிலில்  இதய நோயால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம்  ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ளது 

நாகர்கோவில் இறச்சகுளம் அம்ருதா பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை  முகாம் நடைபெறும். அம்ருதா மருத்துவமனையிலிருந்து குழந்தைகள்  இருதயவியல் ஆலோசகர்கள் வருகை தருகிறார்கள். 18 வயதுக்குக் கீழ்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான குழந்தைகளுக்கு அமிர்தா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ ஆலோசனை நடைமுறைகள் வழங்கப்படும். 

நாகர்கோவில் இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து முகாம் நடைபெறும் இடத்திற்கு இலவச பேருந்து வசதி உள்ளது.  முகாமில் பங்கேற்க கட்டாயம் முன்பதிவு செய்யவேண்டும். முன் பதிவு செய்ய 89215 08515 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory