» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மெக்கானிக் பலி!

புதன் 15, மே 2024 10:24:07 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் படுகாயம் அடைந்த மெக்கானிக் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இல்லாங்குடி மகன் மகிழன் (29). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக வேலைபார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

புதுக்கோட்டை மேம்பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த மகிழன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory