» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து காவல் துறையினருக்கு பயிற்சி

திங்கள் 13, மே 2024 10:01:27 PM (IST)



பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட 3 புதிய முக்கிய  குற்றவியல் சட்டங்கள் குறித்து  தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு 5 நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  தலைமையில் இன்று நடைபெற்றது.

தற்போதுள்ள குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனை சட்டம் (IPC), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (CRPC) மற்றும் இந்திய சாட்சிய சட்டங்கள் (IEA) ஆகியவற்றை ரத்து செய்வதற்கு பாராளுமன்றத்தால் 'பாரதிய நியாய சன்ஹிதா" (Bharatiya Nyaya Sankhita - BNS), 2023 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா" (Bharatiya Nagarik Suraksha Sanhita - BNSS) 2023 மற்றும் 'பாரதிய சாக்ஷிய அதினியம்" (Bharatya Sakshya Adhiniyam - BSA) 2023 ஆகியவை 25.12.2023 அன்று இயற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டங்கள் 01.07.2024 முதல் அமலுக்கு வருவதையடுத்து இச்சட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினருக்கு இன்று (13.05.2024) முதல் பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சியானது முதற்கட்டமாக இன்று முதல் 17.05.2024 வரை ஒரு பிரிவாக மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் ஊரகம், மணியாச்சி, கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 4 உட்கோட்ட காவல்துறையினருக்கும், மற்றொரு பிரிவாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தூத்துக்குடி நகர உட்கோட்டம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 4 உட்கோட்ட காவல்துறையினருக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியை மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர்  லோகேஸ்வரன், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர்  வசந்தராஜ், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர்  வெங்கடேஷ் மற்றும் மாவட்ட குற்ற பிரிவு - II  சந்திரதாசன் உட்பட காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விரிவாக எடுத்துரைத்து பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பயிற்சி காவல்துறையினர் அனைவருக்கும் ஒவ்வொரு பிரிவுகளாக பயிற்சியளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Tony fernandoமே 14, 2024 - 12:10:47 AM | Posted IP 162.1*****

மீண்டும் முத்து நகரில் கொலைகல் பெருகி விட்டது இதற்கு தீர்வு என்ன .. ஜெயகுமார் sp sir மீண்டும் வரணும் .. பிளாக் ல சரக்கு ஆறா ஓடுது உதாரணம் market மாட்டு தாவணி பார் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory