» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மணிமுத்தாறு அனையில் இருந்து தண்ணீர் திறப்பு : அரசாணை வெளியீடு

வியாழன் 9, மே 2024 10:02:02 AM (IST)

மணிமுத்தாறு அணையிலிருந்து இன்று (மே 9) முதல் 120 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் 2756.62 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு 09.05.2024 முதல் 05.09.2024 வரை 120 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு 612.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட ஆளுநரின் ஆணைப்படி அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory