» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோயில் விழாவில் தகராறு: தந்தை, மகன் கைது

வியாழன் 9, மே 2024 8:43:58 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கோயில் கொடை விழாவில் அரிவாளுடன் புகுந்து தகராறில் ஈடுபட்டதாக தந்தை, மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகர நல்லூா் அருள்மிகு காளியம்மன் கோயில் கொடை விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இவ்விழாவுக்கு, அதே பகுதியைச் சோ்ந்த முருகன், அவரது மகன் மாயகிருஷ்ணன் ஆகியோா் கையில் அரிவாளுடன் வந்து பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனராம்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஓட்டப்பிடாரம் போலீசார், தந்தை- மகன் இருவரையும் கைது செய்தனர். மேலும், அவா்களிடமிருந்து 2 அரிவாள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory