» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாட்டரி விற்ற வாலிபர் கைது
புதன் 8, மே 2024 8:58:57 AM (IST)
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டூவிபுரம் பகுதியில் உள்ள தியேட்டர் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மேலப்பாளையம் குறிஞ்சி நகரை சேர்ந்த முருகன் மகன் கோபிநாத் (29) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் கோபிநாத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன், ரூ.5 ஆயிரத்து 150 மற்றும் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.