» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா: அன்னதானத்தை மேயர் தொடங்கி வைத்தார்

செவ்வாய் 7, மே 2024 4:56:40 PM (IST)



தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 30ம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று செவ்வாய்கிழமை காலை அபிஷேகபூஜை, அலங்கார பூஜையுடன் மதியக் கொடை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

கொடைவிழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராஜாபெரியசாமி, உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, காரியதரிசி முனியசாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், காமராஜ், கணக்கர் தெய்வேந்திரன், ஆடிட்டர்கள் மாரியப்பன், ஐயாத்துரை, ஆலோசகர்கள் துரைசாமி, சொல்வழங்கு, ஸ்ரீதரன், இளையராஜா, பெரியசாமி, கமிட்டி உறுப்பினர்கள் கணேஷ் காந்தகுமார், அருணகிரி, சிவசுந்தர், பெரியசாமி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். 

திமுக மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பாக்கியத்துரை, போல்பேட்டை பகுதி பிரதிநிதி லிங்கராஜா, முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, மற்றும் ஜோஸ்பா், சண்முகசுந்தரம், அறிவழகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory