» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் : கே.வி. தங்கபாலு

செவ்வாய் 7, மே 2024 3:14:27 PM (IST)

"எனது 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் எந்த காங்கிரஸ் காரர்களிடமும் ஒரு பைசா கூட நான் வாங்கியது இல்லை" என்று முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு தெரிவித்தார். 

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவல் துறையினர் அழைப்பானை அனுப்பி உள்ளனர் அதற்காக வந்துள்ளேன். இப்போது இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. 

நண்பர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அவருடைய மரணம் கொலை அல்லது தற்கொலை எதுவாக இருந்தாலும் அது வருத்தத்திற்குரியது. அவரது குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயல் நடந்திருக்கக் கூடாது. இதைப் பற்றிய முழுமையான தகவல்களை காவல்துறை முழுமையாக விசாரித்து வருவதாக அறிகிறேன். 

பணம் கொடுக்க வேண்டும் என்று கடிதத்தில் இருப்பதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, முற்றிலும் தவறான தகவல். எனது 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் எந்த காங்கிரஸ் காரர்களிடமும் நான் ஒரு பைசா கூட வாங்கியது இல்லை வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்

தமிழக காவல்துறை மிக சிறந்த முறையில் பணியாற்றக் கூடியது. நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்ற து என்பது அனைவரும் அறிவோம். அவர்கள் உரிய முறையில் விசாரணை செய்வார்கள் என்று நாம் நம்புவோம். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து.  காங்கிரஸ் கட்சியின் கருத்து என்றார்


மக்கள் கருத்து

Gnana Muthuமே 8, 2024 - 10:22:56 PM | Posted IP 172.7*****

போயா அங்குட்டு, ராமஜெயத்தை கொன்னவனையேயே கண்டு பிடிக்க முடியல... இந்த லட்சணத்துல, இத புடுங்கி தள்ளிடுவாங்கலா..?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory