» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா: காவடி எடுத்து வந்த பக்தர்கள்!
செவ்வாய் 7, மே 2024 12:08:35 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 22 ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கமுதி சாயல்குடி உட்பட பல கிராமங்களில் இருந்து மயில் காவடி எடுத்து வந்த பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் நேற்று தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவரும் பாதையாத்தியாக திருச்செந்தூர் புறப்பட்டு சென்றனர்.