» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி : நண்பர் படுகாயம்!

செவ்வாய் 7, மே 2024 11:01:18 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் மகன் அபிஷேக் கோபிநாத் (19). இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பரான போல்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரகாஷ் (19) என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

திருச்செந்தூர் மெயின் ரோடு மேம்பாலத்தில் சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த  இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே அபிஷேக் கோபிநாத் இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory