» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் மதிமுக 31வது ஆண்டு துவக்க விழா

செவ்வாய் 7, மே 2024 10:14:28 AM (IST)



நாசரேத்தில் மதிமுக சார்பில் மதிமுக 31 வது ஆண்டு துவக்க விழா கொண் டாடப்பட்டது.
        
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மற்றும் நாசரேத் பேரூர் மதிமுக சார்பில் மதிமுக 31-வது ஆண்டு தொடக்கவிழா ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி ச.அரிகரன் தலைமையில்  நடைபெற்றது. துவக்க விழாவினை முன்னிட்டு மாலையில் நாசரேத் சந்தி வீதியில் வெடி வெடித்து இனிப்பு கள் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 7 மணி அளவில் நாசரேத் நல்ல சமாரியன் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கப் பட்டது.
       
இந்நிகழ்வில், நாசரேத் பேரூர் செயலர் ஐ.இராபர்ட், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வே.இரஞ்சன்,தெற்கு மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் குரு.மத்தேயுஜெபசிங், பொதுக்குழு உறுப்பினர் இரா.மோ கன்சிங், மாவட்ட பிரதிநிதி கேம்பல பாத் செ.அப்துல்காதர், தெற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மூ.பாபு செல்வன், தெற்கு மாவட்ட மாணவர் அணி துணைச் செயலர் செல்வாஸ், ஆழ்வார்திருநகரி ஒன்றிய மதிமுக துணைச் செயலர் லூ.மாசில்லா மணி, தெற்கு மாவட்ட தொண்டர் அணி துணைச் செயலர் ச.கணேசன்,தொண்டர் படை முத்து கிருஷ்ணன், கட்டாரிமங்கலம் சீயோன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory