» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வங்கி ஊழியரை மிரட்டி செயின், செல்போன் பறிப்பு : அண்ணன், தம்பி உட்பட 3பேர் கைது!

திங்கள் 6, மே 2024 11:10:06 AM (IST)

நாசரேத்தில் வங்கி ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் செயின், செல்போனை பறித்த அண்ணன், தம்பி உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.  

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர் மகன் மனோவா (28). இவர் தனியார் வங்கியில் சுய உதவிக்குழு கடனை வசூல் செய்யும் பணி செய்து வருகிறார். இவர் நேற்று நெய்விளை அருகே பைக்கில் சென்றபோது 3பேர் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 கிராம் தங்கச் செயின் மற்றும் செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் மனோவா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் நெய்விளை பகுதியைச் சேர்ந்த மாயண்டி மகன் பால சதீஷ்குமார் (23), கந்தன் மகன்கள் மாடசாமி (40), மாயாண்டி (28) ஆகிய 3பேரும்  வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3பேரையும் கைது செய்து நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory