» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாப சாவு!
திங்கள் 6, மே 2024 11:00:11 AM (IST)
சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் முரளிகுமார் (37). எலக்ரீசியனாக இவர் நேற்று சிதம்பராபுரம் தினேஷ் என்பவரது வீட்டில் இன்வெட்டர் மற்றும் ஏசி அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவர் மீது தாக்கியதில் முரளிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடன் தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீசார் அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குபதிவு செய்தார். காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கி எலக்ரீசியன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.