» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடுப்பணையில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

திங்கள் 6, மே 2024 10:08:01 AM (IST)

ஏரல் அருகே தடுப்பணையில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் கனகராஜ்(62). இவரும், இவரது உறவினா் ஆறுமுகம் என்பவரும் ஏரல் அருகேயுள்ள மங்கலகுறிச்சி தடுப்பணையில் குளிப்பதற்காக நேற்று மாலையில் சென்றனராம். அப்போது கனகராஜ் எதிா்பாராமல் நீரில் மூழ்கினாராம். 

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனா். அவரும் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory