» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மணிநகர் முனிய சுவாமி கோவில் கொடை விழா!

சனி 4, மே 2024 5:34:57 PM (IST)



நாசரேத் மணிநகர் முனிய சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம்,  நாசரேத் மணிநகர் அருள்மிகு முனிய சுவாமி கோவில் கொடை விழா கடந்த  வியாழன்று துவங்கி யது. மதியம் அன்னதானமும், மாலை திருவிளக்கு பூஜையும் இரவு வில்லிசையும் நடைபெற்றது.  வெள்ளிக்கிழமை காலை முக்கடல் சங்கமத்திலிருந்து புனித நீர்  எடுத்து வரப்பட்டு ஹோமம் வளர்த்து புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம்  செய்யப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதிய பூஜை நடந்தது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10 மணியளவில் கும்பம், கரகாட்டம் நடந்தது. 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாம பூஜை நடைபெற்றது. சனிக்கி ழமை காலையில் வரிதாரர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு கோவில்கொடை விழா நிறைவுபெற்றது.விழாஏற்பாடு  களை மணிநகர் முனிய சுவாமி கோவில் நிர்வாகிகள்  செய்திருந் தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory