» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லையில் சமூக ஆர்வலருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: மர்ம நபர் வெறிச்செயல்!!

சனி 4, மே 2024 3:20:06 PM (IST)



நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் என்பவரை, மர்ம நபர் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை  மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பெர்டின் ராயன் (35). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர் சமூக ஆர்வலராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தனியார் பேட்மின்டன் கிளப்பில் விளையாடுவதற்காக சென்றிருந்தார். அப்போது  அங்குவந்த மர்மநபர், பெர்டின் ராயனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். 

இதில் தலை, முதுகு, கைகளில் பலத்த காயமடைந்த பெர்டின் ராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் திருநெல்வேலியில் முறைப்படி அனுமதி பெறாமல் கட்டி திறக்கப்பட்ட ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் குறித்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் இவர் வழக்கும் தொடர்ந்து உள்ளார். 

மாநகராட்சியில் அனுமதி பெறாத கட்டடங்கள் மற்றும் நெல்லை மாநகராட்சியின் ரோடு காண்ட்ராக்டில் தனியார் நிறுவனம் முறைகேடாக அனுமதிக்கப்பட்ட விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், சமூக அக்கறையுடன் கேள்விகள் எழுப்பி வருகிறார். இந்நிலையில் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஐகிரவுண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory