» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் லோடு வேன் டிரைவர் பலி

சனி 4, மே 2024 11:44:48 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் படுகாயம் அடைந்த லோடு வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி சண்முகபுரம் வண்ணார் 3வது தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் பாலசிங் (26). லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 1ம் தேதி தனது மோட்டார் பைக்கில் வண்ணார் 3வது தெருவில்  சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் புஷ்பராணி கொடுத்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory