» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் லோடு வேன் டிரைவர் பலி
சனி 4, மே 2024 11:44:48 AM (IST)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் படுகாயம் அடைந்த லோடு வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி சண்முகபுரம் வண்ணார் 3வது தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் பாலசிங் (26). லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 1ம் தேதி தனது மோட்டார் பைக்கில் வண்ணார் 3வது தெருவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் புஷ்பராணி கொடுத்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.