» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டில் பதுக்கிய 1 கிலோ கஞ்சா பறிமுதல் : ஒருவர் கைது!
சனி 4, மே 2024 10:15:35 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் பீச் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் தலைமையிலான போலீசார் பீச்ரோடு இனிகோ நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். இப்போது அங்கிருந்த சுமார் 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். மேலும் இது தொடர்பாக பிளாரன்ஸ் மகன் பாஸ்கர் என்ற சுறா பாஸ்கர் (44) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.