» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அம்மா வாட்டர் விற்பனை நிறுத்தம் : ஓபிஎஸ் அணி ஏசாதுரை கண்டனம்!

சனி 4, மே 2024 10:04:55 AM (IST)

தூத்துக்குடியில் அம்மா வாட்டர் பாட்டில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதற்கு ஓபிஎஸ் அணியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் ஏசாதுரை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் "மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மக்கள் நலன் தான் முக்கியம் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு அம்மா உணவகம், அம்மா காய்கனி கடை, அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட், என பல்வேறு மக்கள் நலனை பாதுகாத்து குறைந்த விலையில் மக்களுக்கு அரசின் நேரடி பார்வையில் வழங்கப்பட்டு வந்தது. 
    
அதே போல் வௌியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி அனைத்து பேருந்து நிலையங்களிலும் 10 ரூபாய்க்கு அம்மா வாட்டர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதை பொதுமக்கள் மற்றும் பேருந்தில் செல்லும் பயணிகள் பயன்படுத்தி வந்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மக்களுக்காக அம்மா அறிவித்த பல திட்டங்களை முடக்கியும் இருக்கின்ற ஓரு சில திட்டத்தையும் மூடுவிழா செய்து வருகிறது. 

அதே வழியில் அனைத்து பேருந்து நிலையங்களிலும் இந்த கோடைகாலத்தில் மக்கள் பொிதும் பயனடைய கூடிய அம்மா வாட்டர் பாட்டில் விற்பனை திட்டத்தை முழுமையாக நிறுத்தியுள்ளனர்.  இதை உடனடியாக தமிழக அரசு போர்கால அடிப்படையில் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிற்கிணங்க தமிழக அரசை கண்டித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory