» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் அருகே கார் தீப்பற்றி எரிந்து சேதம்

வியாழன் 2, மே 2024 8:49:02 AM (IST)



திருச்செந்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து சேதம் ஆனது. 

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் புதுக்கடை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் கரீம் (35). இவர் நேற்று மாலை தனது காரில் குடும்பத்துடன் அடைக்கலாபுரம் சாலையில் திருச்செந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அடைக்கலாபுரம் டாஸ்மாக் கடை அருகே வந்த போது காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது. 

இதையடுத்து கார் ஓரமாக நிறுத்தப்பட்டது. அதில் இருந்த அப்துல் கரீம் உள்பட அனைவரும் உடனடியாக கீழே இறங்கினார்கள். தொடர்ந்து கார் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தண்ணீைர பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் கார் எரிந்து நாசமானது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory