» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை: 2 போ் கைது
வியாழன் 2, மே 2024 8:38:35 AM (IST)
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தில் தென்பாகம் காவல் உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஹரிசுதன் (24), வள்ளிநாயக புரத்தைச் சோ்ந்த ராமலிங்கம் (33) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவா்கள் இருவரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவா்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.