» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி
வியாழன் 2, மே 2024 8:24:33 AM (IST)
தூத்துக்குடியில் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி பாலவிநாயகா் கோயில் தெருவில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுக்கூட்டம் நடைபெற்ற சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்தது. மாவட்டத் தலைவா்கள் கிருஷ்ணராஜ் (ஏஐடியூசி), பேச்சிமுத்து (சிஐடியூ) ஆகியோா் ஆகியோா் தலைமை வகித்தனர். நிா்வாகிகள் அப்பாத்துரை, பாலசிங்கம், கிருஷ்ணவேணி, முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.
பேரணியில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தனியாா் மயமாக்கலைக் கைவிட வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடா்ந்து, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் , சிஐடியூ மாநிலச் செயலா் ரசல், ஏஐடியூசி மாநிலச் செயலா் பாரதி, மாவட்டச் செயலா் லோகநாதன், டிடியூசி மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன் ஆகியோா் பேசினர். இதில், ஏராளமான தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.