» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சேவைக் குறைபாடு: புதிய நான்கு சக்கர வாகனம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

புதன் 1, மே 2024 8:25:10 AM (IST)

சேவைக் குறைபாடு காரணமாக புதிய நான்கு சக்கர வாகனம் மற்றும் 1,10,000 ரூபாய் இழப்பீடு ஆகியவற்றை நான்கு சக்கர விற்பனையாளர் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பிததது.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தைச் சார்ந்த அருள் லிபின் என்பவர் தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டிலுள்ள நான்கு சக்கர வாகன விற்பனையாளரிடம் ஒரு கார் வாங்கியுள்ளார். அங்கேயே நான்கு சர்வீஸ்கள் செய்துள்ளார். நான்காவது சர்வீஸ் செய்த போது குறைந்த அளவு இஞ்சின் ஆயில் ஊற்றப்பட்டதால் இந்தக் காரின் இஞ்சின் முழமையாக பழுதடைந்துள்ளது. கார் வாங்கிய ஒரு வருடம் 2 மாதத்திற்குள்ளாகவே முற்றிலும் பழுதானதால் புதிய கார் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கார் விற்பனையாளர் அதற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அருள் லிபின் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பழுதான நான்கு சக்கர வாகனத்திற்கு பதில் புதிய நான்கு சக்கர வாகனம் மற்றும்; சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 1,00,000 வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆகியவற்றை இரு மாத காலத்திற்குள்; வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory