» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொல்காப்பியர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
செவ்வாய் 23, ஏப்ரல் 2024 11:09:09 AM (IST)
தொல்காப்பியர் பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொல்காப்பியர் பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மார்த்தாண்டம் காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு இன்று பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.தமிழரசி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் செ.கனகலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜான் ஜெகத் பிரைட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.