» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போக்சோ வழக்கில் முதியவருக்கு 14 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 23, ஏப்ரல் 2024 7:55:22 AM (IST)
இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முதியவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சகாயபுரத்தைச் சோ்ந்த துரைராஜ் மகன் ஜான்ராஜ் (57). இவா் 10 மற்றும் 8 வயது சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு திருச்செந்தூா் அனைத்து மகளிா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இவா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டது. இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ் வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட ஜான்ராஜுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில், அரசு வழக்கறிஞா் முத்துமாரி ஆஜரானார்.