» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் 2பேர் கைது!
ஞாயிறு 21, ஏப்ரல் 2024 12:02:06 PM (IST)
தூத்துக்குடியில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளஞ்சிறார் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஜாகீர் உசேன் நகர் காட்டுப் பகுதியில் நேற்று இரவில் வாலிபர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தூத்துக்குடி தாளமுத்துநகரை அடுத்த அ.சண்முக புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (27) என்பதும், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அவரை மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி ஜே.ஜே., நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வின் ராஜா (23), மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகிய 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.