» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விபத்தில் கார் கார் சேதம்: டிரைவர் தற்கொலை!
ஞாயிறு 21, ஏப்ரல் 2024 9:02:16 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் கார் சேதமடைந்ததால், மனமுடைந்த டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் செல்வகணேஷ் (28). இவர் அதே ஊரைச் சேர்ந்த உறவினருக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் காரை ஊரிலிருந்து முறம்பன் கிராமத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது கார் நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் லேசாக சேதம் ஏற்பட்டது. செல்வகணேசுக்கு எந்தவித காயம் ஏற்படவில்லை. விபத்தில் கார் சேதமடைந்ததால், மனமுடைந்த செல்வகணேஷ் காரின் உரிமையாளரும், தனது தந்தையும் திட்டுவார்கள் என்று நினைத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு உள்ளார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் செல்வ கணேசை மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே செல்வ கணேஷ் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட சந்திரசேகருக்கு ஆனந்தவல்லி என்ற மனைவியும், ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர்.
M. ஹை கோர்ட் ராஜாApr 21, 2024 - 12:14:40 PM | Posted IP 172.7*****