» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் கார் கார் சேதம்: டிரைவர் தற்கொலை!

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 9:02:16 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் கார் சேதமடைந்ததால், மனமுடைந்த டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் செல்வகணேஷ் (28). இவர் அதே ஊரைச் சேர்ந்த உறவினருக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் காரை ஊரிலிருந்து முறம்பன் கிராமத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். 

அப்போது கார் நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் லேசாக சேதம் ஏற்பட்டது. செல்வகணேசுக்கு எந்தவித காயம் ஏற்படவில்லை. விபத்தில் கார் சேதமடைந்ததால், மனமுடைந்த செல்வகணேஷ் காரின் உரிமையாளரும், தனது தந்தையும் திட்டுவார்கள் என்று நினைத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு உள்ளார். 

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் செல்வ கணேசை மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே செல்வ கணேஷ் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட சந்திரசேகருக்கு ஆனந்தவல்லி என்ற மனைவியும், ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர்.


மக்கள் கருத்து

M. ஹை கோர்ட் ராஜாApr 21, 2024 - 12:14:40 PM | Posted IP 172.7*****

இறந்தது செல்வ கணேசா அல்லது சந்திரசேகரா ஏன் இந்த செய்தியில் இவ்வளவு குழப்பம் சரியாக தட்டச்சு செய்யவும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory