» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காணாமல் போன வியாபாரி சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 8:40:04 AM (IST)

கோவில்பட்டியில் காணாமல் போன வியாபாரி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த கூசாலிப்பட்டி தெற்குத் தெருவை சோ்ந்த ராஜாமணி மகன் அருட் செல்வம் (40). தெற்கு திட்டங்குளத்தில் உள்ள தினசரி சந்தையில் காய்கனி கடை நடத்தி வரும் இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 12 வயதில் மகனும், ஒன்றை வயதில் மகளும் உள்ளனா். கடந்த 16ஆம் தேதி காலை 6 மணிக்கு சித்ரா காய்கனி கடைக்கு சென்றாராம். 

அதைத் தொடா்ந்து வீட்டை விட்டுச் சென்ற அருட் செல்வம் வீடு திரும்பவில்லை எனக்கூறி அவரது மனைவி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில் கோவில்பட்டி-கடலையூா் சாலையில் உள்ள ஊா்க்காவல் சாமி கோயில் அருகே உள்ள பாலத்துக்கு அடியில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், அவா் காணாமல் போன அருட்செல்வம் என்பது தெரியவந்தது. மது அருந்தும் பழக்கமுடைய அருட் செல்வம் மது அருந்திய நிலையில் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயம் அடைந்த நிலையில் இறந்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory