» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மளிகைக் கடையில் மேற்கூரையை பிரித்து திருட்டு

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 8:35:57 AM (IST)

தூத்துக்குடியில் மளிகைக் கடையின் மேற்கூரையை பிரித்து பொருள்களை திருடியவா்களை போலீசார் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள முள்ளக்காடைச் சோ்ந்த பாண்டியராஜ் மகன் கணேசன்(54). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா், கடந்த 14ஆம் தேதி தனது கடையை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டாராம். 

சம்பவத்தன்று ஊர் திரும்பிய அவர் கடைக்கு வந்தபோது, மேற்கூரை உடைக்கப்பட்டு கடையில் இருந்த பீடி, சிகரெட், மளிகைப் பொருள்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்தனவாம். இதுகுறித்து புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory